சர்வதேசத்தின் முக்கிய விமான சேவைகளை நிறுத்தும் air india நிறுவனம்
உயர்ந்து வரும் ஜெட் எரிபொருள் விலை மற்றும் பிராந்திய பதட்டங்கள் தொடர்பான தொடர்ச்சியான வான்வெளி கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் ஏர் இந்தியா நிறுவனமானது தனது சர்வதேச விமான சேவைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி ஜூலை 2026 வரை சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சமீபத்திய வாரங்களில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் வான்வெளி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் விமானப் பாதைகள் நீளமாகி வருவதாலும், மேலும் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் நுகர்வு பிரச்சினை
விமானங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தால், சில நீண்ட தூர வழித்தடங்கள் இலாபகரமற்றதாகிவிட்டன என்றும், இது அதிக எரிபொருள் நுகர்வு மற்றும் நீண்ட பயண நேரங்களுக்கு வழிவகுக்கிறது என்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய சர்வதேச சேவைகளை முழுமையாக நிறுத்துவதற்குப் பதிலாக, இந்தத் தற்காலிகக் குறைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கையைப் பாதிக்கும் என கருதப்படுகிறது.
எரிபொருள் விலை நிலவரங்கள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்து, ஏர் இந்தியா ஜூலை மாதம் இந்த நிலைமையை மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் நிலையற்ற எரிசக்தி சந்தைகள் மற்றும் பாரம்பரிய விமான வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகளால் உலகளாவிய விமான நிறுவனங்கள் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொண்டு, அதன்மூலம் பயண அட்டவணை மற்றும் இலாபத்தன்மை பாதிக்கப்படும் வேளையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |