புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் விவகாரம்! நியமிக்கப்பட்ட விசேட குழு
srilanka
ajith rohana
By Vasanth
புற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவில் 10 அதிகாரிகள் அங்கம் வகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த குழுவிற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் தலைமை தாங்குவதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.