உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் - அதிபர்கள் எடுத்த முக்கிய தீர்மானம்
student
al exam
principals
By Sumithiran
கொவிட் தொற்று காரணமாக தற்போது தடைப்பட்டுள்ள கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த சங்கத்தின் தலைவர் நிமல் முதுன்கொட்டுவ இது தொடர்பில் தெரிவிக்கையில்,
மாணவர்களின் விண்ணப்ப பத்திரங்களை எதிர்வரும் 21ஆம் திகதிக்குள் அனுப்பி நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை அனுப்புவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.