பதவி விலகல் கடிதத்துடன் கோட்டாபயவை சந்திக்க சென்ற அலிசப்ரி?
gotabaya
alisabri
Letter of resignation
By Sumithiran
நீதியமைச்சர் அலி சப்ரி(Ali Sabri) தான் வகிக்கும் அமைச்சர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை ஆகிய பதவிகளில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்துடன் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை(Gotabaya Rajapaksa) சந்திக்க சென்றுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற அரச தலைவரின் செயலணியின் தலைவராக வண.கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலி சப்பரி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.