தேர்ச்சி பெற்றாலும், தோற்றாலும் நீங்களே உண்மையான ஹீரோக்கள் - ஹரின்
எமக்கு தெரிந்த வகையில் வரலாற்றில் மிகவும் கடினமான மற்றும் சவாலான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன.
இத்தேர்வை எழுதிய பல லட்சக்கணக்கான மாணவர்களில் என் அன்பு மகளும் ஒருவர். இந்த சவாலான நேரத்தில் என் மகளின் பரீட்சை முடிவுகள் குடும்பத்திற்கும் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இந்த தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், நீங்கள் அனைவரும் எனக்கு ஹீரோக்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் பாடசாலை செல்லும் மாணவர்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றார்கள்.
பல மாணவர்களுக்கு தம் வகுப்புகளுக்கு பொறுப்பான ஆசிரியரை கூட தெரியாத நிலை உள்ளது.
இந்த பயங்கரமான கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பேரழிவின் விளைவே அது.
இந்தத் தேர்வு முடிவுகள் நம் தலைவிதியை தீர்மானிக்காது என்பதை நாம் அனைவரும் நிச்சயமாக அறிவோம்.
உங்கள் இலக்கை நோக்கிய பேருந்தை தவறவிட்டதாக ஒருபோதும் நினைக்க வேண்டாம்.
நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ ஏராளமான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.