ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்)

Election Commission of Sri Lanka Douglas Devananda Ranil Wickremesinghe Wickremesinghe Ranil Election
By Shadhu Shanker Nov 03, 2023 05:37 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் தீர்வினைக் காண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, மக்கள் தங்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவார்களாயின், தொடர்ந்து வருகின்ற ஐந்து வருடங்களில் நாடு சுபீட்சமான நிலையை அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் நேற்று (03) நடைபெற்ற நிறுவனர் ப.செபராஜாசிங்கம் நினைவுதினம் மற்றும் பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்) | All Problems Can Be Solved By Ranil Wickremesinghe

வங்கியின் முன்னால் விழுந்து கிடந்த ரூபா 50 இலட்சம் : பின்னர் நடந்த சம்பவம்

வங்கியின் முன்னால் விழுந்து கிடந்த ரூபா 50 இலட்சம் : பின்னர் நடந்த சம்பவம்

தமிழ் தலைவர்கள் 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “எமது தமிழ் தலைவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தோல்விகண்ட நிலையில் தான் அன்றைய காலகட்டத்தில் எங்களுடைய கைகளில் ஒரு ஆயுதப் போராட்டம் வலிந்து கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த ஆயுத போராட்டமும் ஒரு கட்டத்துக்கு பிறகு திசை திரும்பி பலவீனப்பட்டு போய்விட்டது இவ்வாறு பலவீனப்பட்டு போய்க்கொண்டிருந்த பொழுதுதான் 1987 களில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

அதை நாங்கள் பின்பற்றி இருப்போமாக இருந்தால் இன்று நாம் பல மடங்கு முன்னேற்றகரமான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருந்திருப்போம் என்று நினைக்கின்றேன். ஆனால் அது வீணடிக்கப்பட்டுவிட்டது.

ரணிலால் தீர்வினைக் காண முடியும்: டக்ளஸ் நம்பிக்கை (படங்கள்) | All Problems Can Be Solved By Ranil Wickremesinghe

அதிபர்த் தேர்தல் 

நாட்டில் நடைபெற்ற அழிவு யுத்தம் காரணமாக தேவையற்ற பொருளாதார செலவுகள் மற்றும் யுத்தத்துக்காக வெளிநாடுகளில் பெற்ற கடன்களும் அதைவிட நாட்டினுடைய ஏனைய தேவைகளுக்காக பெறப்பட்ட கடன்களும் சரியான ஒரு பொறிமுறையை நோக்கி கையாளப்படாது போய்விட்டது.

இதனால் நாட்டை முன் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டது. இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் இந்த நாட்டை பொறுப்பெடுத்த இன்றைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு சென்று நிலமைகளை சீர்செய்து வருகின்றார்.

அதில் வெற்றியும் கிடைத்துள்ளது அந்தவகையில் விரைவில் ஒரு அதிபர்த் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் இன்றைய அதிபர் வெற்றி பெறுவாராக இருந்தால் அடுத்த ஐந்து வருடத்தில் நாடு இன்னும் பல மடங்கு முன்னோக்கி செல்லும் என்பது என்னுடைய நம்பிக்கை. பொதுவாக நான் என்னுடைய அனுபவங்களை என்னுடைய நம்பிக்கையை தான் எப்பொழுதும் வெளிப்படுத்த வருகின்றேன்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

தீராப் பிரச்சினை

என்னுடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய 15 வருட ஆயுதப் போராட்ட வரலாறும் 30 வருடத்துக்கு மேலான நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் வரலாறும் அதனூடான அனுபவங்களும் எனக்கு இருக்கின்றது இதேநேரம் அடுத்த அரசாங்கங்கள் வந்தாலும் என்னுடைய நிலைமை இவ்வாறானதாகவே இருக்கும்.

அத்துடன் எனது அணுகுமுறையானது வெறுமனே உசுப்பேற்றும் அரசியலை பேசுவதுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து வெறும் வாக்குககளை அபகரிப்பதற்கான அரசியல் இல்லை.

நான் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுடனே நல்லிணக்கத்தை வளர்த்து வருகின்றேன்.

அதில் வெற்றி காணமுடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு என்றும் தெரிவித்த அமைச்சர் இந்த பாடசாலையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அனைத்து செயற்பாடுகளிலும் பாடசாலை சமூகத்துடன் சேர்ந்து தன்னுடைய பங்களிப்பும் முழுமையாக கிடைக்கப்பெறும்'' என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024