பிரதி அமைச்சரால் பழிவாங்கப்பட்ட தவிசாளர்! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
கிபுள் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கிபுள் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்றய தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.
வெலிஓயா அன்று மணலாறு
அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு இன்று அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றையதினம் வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது.
அதில் நான் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். அந்த கூட்டத்தில் எனக்கு வழமையாக ஒதுக்கப்படும் இடத்தில் அமர்வதற்கு நான் சென்றபோது அங்கு அமர வேண்டாம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார்.
அது தொடர்பாக நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது, இதுவே நடைமுறை என கூறினார்.
வழமையாக கூட்டம் இடம்பெறும் போது எனக்கு வழங்கப்பட்டு வந்த இடத்திலேயே நான் அமரச் சென்றேன். அத்துடன் கூட்டம் ஆரம்பிக்க முன்னரே தமிழ்மொழி பெயர்ப்பு தேவை என்பதை பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால் அந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே என்னை அவமதிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்ப்பாட்டை மேற்கொள்கிறீர்கள் என ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன்.
மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோதும் மக்கள் பிரதிநிதி என்று பாராமல் அவர்கள் அவமதித்துள்ளனர்.
இதனால் இக்கூட்டத்தில் இருந்து நான் வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறிவிட்டேன்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 3 மணி நேரம் முன்