ஈரானின் தாக்குதல் எதிரொலி! சர்வதேச சந்தையில் உச்சம் தொட்ட அலுமினிய விலை!
கடந்த வார இறுதியில் இரண்டு மத்திய கிழக்கு உலோக உற்பத்தியாளர்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அலுமினியத்தின் விலை 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவரை காணப்படாத அளவான விலை வரம்பை நெருங்கியுள்ளது.
இது, இந்தத் தொழில்துறைக்கு விநியோக நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
லண்டன் உலோகப் பரிவர்த்தனை நிலையத்தில் நேற்று, எதிர்கால விலைகள் எதிர்பார்ப்புக்கள் ஆரம்பத்தில் 5.5% உயர்வை கொண்டிருந்ததாகவும், ஒரு தொன்னுக்கு 3,492 டொலரை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விலை உயர்வு
இந்த விலை இதற்கு முன்பு ஏப்ரல் 2022-இல் காணப்பட்டதாகும். இந்த விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு, எதிர்காலத்தில் அலுமினியம் தொடர்பான பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விலை உயர்வு, குறிப்பாக உலகளாவிய கட்டுமானம் மற்றும் வாகன உற்பத்தித் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து அலுமினியத்தின் விலை சுமார் 10% உயர்ந்துள்ளது.
எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் (EGA) மற்றும் அலுமினியம் பஹ்ரைன் ஆகியவை வளைகுடாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் தாக்குதலுக்கு உள்ளாயினர்.
தாக்குதல்களில் தனது அல் தவீலா உருக்காலை ”கணிசமான” சேதமடைந்ததாகவும், இதில் பலர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
உலக சந்தையில் தாக்கம்
சனிக்கிழமை நடந்த தாக்குதல்கள், கடந்த ஒரு மாதமாக கடுமையான விநியோகத் தடைகளைச் சந்தித்து வரும் அப்பகுதியிலுள்ள நிறுவனங்களின் எதிர்காலத்தை மேலும் இருளடையச் செய்தன.

உலகளாவிய அலுமினிய விநியோகத்தில் சுமார் 9% வளைகுடாப் பகுதியிலிருந்து வருகிறது. ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறம்பட மூடியதிலிருந்து, அங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அந்த உலோகத்தை அப்பகுதிக்கு அப்பால் ஏற்றுமதி செய்ய இயலாமல் உள்ளன.
EGA-வின் அறிக்கையின்படி, அதன் சேதமடைந்த உருக்காலை 2025-ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் தொன் வார்ப்பு உலோகத்தை உற்பத்தி செய்தது. ″இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய அலுமினிய சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இது, இந்தத் தொழில்துறையையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு விநியோக நெருக்கடிக்கான அபாயத்தை அதிகரித்துள்ளது.
இவ்வாறான பாதிப்பு நீடித்தால், சந்தையானது தற்காலிக மந்தநிலையிலிருந்து விலகி, விநியோகப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சீனாவின் உற்பத்தி துறைகளான மின்னணுவியல், போக்குவரத்து, கட்டுமானம் ஆகிய துறைகளிலும், சூரிய மின் தகடுகள் மற்றும் பிற தொழில்களிலும் அலுமினியம் ஒரு இன்றியமையாத பொருளாக விளங்குகிறது.
மிகப்பெரிய அலுமினிய உற்பத்தி
உலகின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளரான சீனா, மாசு உமிழ்வைக் குறைக்கவும், அதிகப்படியான உற்பத்தித் திறனைத் தடுக்கவும், தனது உற்பத்தியை ஆண்டுக்கு 45.5 மில்லியன் தொன்களாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
பரந்த சந்தைக்கு விநியோகத்தை அதிகரிப்பதில் அந்நாட்டிற்கு ஒரு பங்கு உண்டு என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
″விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக சீன அரசாங்கம் முடிவு செய்தால், அவர்கள் நாட்டில் செயல்படாமல் இருக்கும் பல உருக்காலைகளை மீண்டும் இயக்க முடியும். அதனால் உலகம் முழுவதும் அலுமினியம் நிரம்பிவிடும்,” என்று சுரங்க நிறுவனமான ஏசிஜி மெட்டல்ஸின் தெரிவித்துள்ளார்.
″உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஓரளவு சாத்தியம் இருந்தாலும், குறிப்பாக இந்த மோதல் மற்ற உலோக விநியோகச் சங்கிலிகளுக்கும் பரவினால், உலகளாவிய சந்தை மேலும் அதிர்ச்சிகளுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்