கடற்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை! கடற்றொழிலாளர்களுக்கு அவசர அறிவிப்பு
காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலான மற்றும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடல் பிராந்தியங்களுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் ஆம்பர் எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05-07-2026) காலை விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் காங்கேசன்துறையில் இருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
பனிமூட்டமான நிலை
அத்தோடு மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடலலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் இதுகுறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |