உக்ரைனில் ரஷ்யாவுக்கு மரண அடி -உயிரிழந்த படைவீரர்களின் சடலங்களுடன் இரவில் பறக்கும் அம்புலன்ஸ்கள்(வீடியோ)
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுக்கு போர்க்களம் அவர்கள் நினைத்தது போல் சுலபமானதாக இருக்கவில்லை. உக்ரைன் படையினரின் கடும் எதிர்தாக்குதலால் ரஷ்ய படையினர் நாளாந்தம் பெருமளவில் கொல்லப்படுவதுடன் படை தளபாடங்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் உக்ரைனில் கொல்லப்படும் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க இரவு நேரங்களில் அவர்களது சடலங்களை ஏற்றிய விமானங்கள்,ரயில்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் அண்டை நாடான பெலாரஸ்க்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா (RFE) மூலம் பெறப்பட்ட காட்சிகள் மார்ச் மாத தொடக்கத்தில் பெலாரஷ்ய நகரமான ஹோமல் வழியாக இராணுவ அம்புலன்ஸ்கள் செல்வதை காட்டுகின்றன.
RFE ஒரு மருத்துவ அதிகாரியை மேற்கோள் காட்டி, மார்ச் 13 வரை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களின் சடலங்கள் Homel-ல் இருந்து ரஷ்யாவிற்கு ரயில்கள் அல்லது விமானம் மூலம் அனுப்பப்பட்டது என அவர் கூறியதாக தெரிவித்துள்ளது.
ஹோமலில் வசிப்பவர்கள் RFE-யிடம் காயமடைந்த ரஷ்ய வீரர்கள் நகரத்தில் உள்ள மூன்று தனித்தனி மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும், உள்ளூர் நோயாளிகள் வருகையை நிர்வகிப்பதற்கு முன்கூட்டியே வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தனர்.
"அங்கு பல ரஷ்யர்கள் காயமடைந்துள்ளனர், இது திகிலூட்டுகிறது. பயங்கரமாக சிதைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முழுவதும் அவர்களின் முனகல்களைக் கேட்கமுடியவில்லை" என்று ஹோமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைன் படையெடுப்பில் தமது தப்பில் 500 இற்கும் குறைவான படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினரை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
There are so many dead & wounded Russian soldiers in Homel region, Belarus, that they've started loading corpses on trains at night "so as not to attract attention." 2,500 KIA sent back to Russia, hospital staff say. That's 5x the official number https://t.co/hhuiJG5j2C pic.twitter.com/SKeX5oaEPh
— Alec Luhn (@ASLuhn) March 19, 2022
