ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!
ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பொருளாதார போருக்கு அமெரிக்கா எகனாமிக் டி-டே" (Economic D-Day) என்று பெயர் சூட்டியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள இந்தத் தடைகள், அந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டவை . இது ஈரானின் மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா எடுக்கும் ஒரு உளவியல் ஆயுதம் என்றே கருதப்படுகிறது.
"டி-டே" என்ற சொல் இரண்டாம் உலகப்போரை நினைவூட்டுவது போல, ஈரானிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பணவீக்கம் குறித்த பதற்றத்தையும் உருவாக்குவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடைகளால் ஈரானிய நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது (1 டொலர் = 2 மில்லியன் ரியால்). உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஈரான் இந்த நடவடிக்கையை "பொருளாதார பயங்கரவாதம்" என்று சாடியுள்ளது.
இது தொடர்பான விரிவான விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |