பிளாஸ்ரிக் கழிவுகளை விற்று இலங்கையில் வகுப்பறை கட்ட நன்கொடை அளித்த அமெரிக்க சிறுமி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவரும் 16 வயது பாடசாலை மாணவி நீர்கொழும்பு மகளிர் ஜூனியர் பாடசாலைக்கு வகுப்பறை அமைக்க முன்வந்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கைலி குரூஸ் என்ற குறித்த மாணவி, ஒரு வசதியான வகுப்பறை அமைக்க ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
அந்த மாணவி தனது ஓய்வு நேரத்தில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை விற்று பணம் சேகரித்து அந்த நிதியை இலங்கையில் பாடசாலை வகுப்பறை அமைக்க உதவியுள்ளார்.
இத்திட்டத்தை ஒருங்கிணைத்த ருசித குரேரா, அதிகாரியான திருமதி பி.எஸ்.ஹரிச்சந்திரவிடம் நேற்று 10 -ம் திகதி அதிகாரபூர்வமாக பணத்தை ஒப்படைத்தார்.
பாடசாலையில் மிகக் குறைந்த வசதிகள் உள்ளன. மற்றும் தரம் 01 முதல் சாதாரண வகுப்பு வரையே உள்ளன.
இங்கு மாணவர்களின் எண்ணிக்கை 240 மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 16 பேர் கடமையாற்றுகின்றனர்.