கனேடியர்களுக்காக அமெரிக்கர் செய்த காரியம்
அமெரிக்க (USA) அரசாங்கம் தற்போது கனடாவை (Canada) கையாளும் முறையால் கவலையடைந்த ஒருவர், கனேடிய நகரொன்றில் விளம்பரமொன்றை காட்சிப்படுத்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.
வாங்கூவர் நகரில் ஆர்ட் கேலரிக்கு அருகிலுள்ள டிஜிடல் விளம்பர பலகைகளிலேயே அந்த அமெரிக்கர் இவ்வாறு மன்னிப்பு செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விளப்பரத்தில் “அன்புள்ள கனடா, எங்களை மன்னிக்கவும். நாம் மிகவும் வருந்துகின்றோம்.” என மன்னிப்பு கோரியுள்ளார்.
மன்னிப்பு செய்தி
அதேநேரம், இந்த விளம்பரத்திற்கு கீழே “உங்கள் அமெரிக்க நண்பர்கள்”என கையொப்பமிடப்பட்டுள்ளதுடன் எந்த நிறுவனங்களின் பெயரும் விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை.
மேலும், இந்த விளம்பர இடத்தை வாங்கிய அமெரிக்கர் தனது பெயரை வெளியிட மறுத்துள்ளார்.
இது தனிப்பட்ட மனிதரின் செய்தியாக மட்டுமல்லாது, பலரின் உணர்வை பிரதிபலிக்கிறது என்பதற்காகவே அவரவர் அடையாளத்தை மறைத்துள்ளதாக கூறியுள்ளார்.
பலர் பாராட்டு
விளம்பரம் தொடர்பில் ஊடகமொன்றிடம் அவர் தெரிவித்ததாவது, “வடக்கு எல்லைக்கு அப்பால் வாழும் எங்கள் தாக்கத்திற்குள்ளான அண்டை நாடுகளுக்கு, எவ்வளவு அமெரிக்கர்கள் இதனால் வேதனையடைகின்றனர் என்பதையும், கனடாவின் அரசியல் சுயாதீனத்தைக் கௌரவிக்காத சூழ்நிலைக்கு எங்கள் வருத்தத்தையும் தெரிவிக்க விரும்பினேன்”என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விளம்பர பலகைகளில் இந்த மன்னிப்பு செய்தியை வாங்கூவரில் பாதசாரிகள் பார்த்ததும், ஆச்சரியத்துடன் பதிலளித்துள்ளதுடன் பெரும்பாலானவர்கள் இதைப் பாராட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
