எமது குருதியை உறிஞ்சினாய் இன்னும் எதுவரை எமது கண்ணீரை உறிஞ்சுவாய் - கோசங்களுடன் போராட்டத்தில் உறவுகள்!
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் அம்பாறை திருக்கோவிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்றைய தினம் காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கண்ணீருக்கு தடை விதிப்போரிடம் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கலாமா, வேண்டாம் வேண்டாம் ஓஎம்பி வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், எங்கள் குருதியை உறிஞ்சினாய் எதுவரை எங்கள் கண்ணீரை உறிஞ்சுவாய், 2இலட்சம் பிச்சை வேண்டாம் எனக் கோசம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோசங்களுடன் போராட்டம்

இந்த பேராட்டத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூ செயற்பாட்டாளர் தாமோதரன் பிரதீபன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று காலை திருக்கோவிலில் உள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு கலந்துரையாடலிற்கு சென்ற மாணவர்கள் பயணித்த வாகனத்தையும் மாணவர்களையும் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களையும் புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்த நிலையில் புகைப்படம் எடுக்கமுடியாது என மாணவர்கள் விவாதித்தும் தொடர்ச்சியாக ஒளிப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












