நீர்கொழும்பு வன்முறை சம்பவம் :உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நீர்கொழும்பு சிறையில் நடந்த கொடூரமான கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
முன்னதாக சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் அறுவர் சிறை அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறை அதிகாரிகள்
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஏழு பேர் சிறை அதிகாரிகள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த வன்முறையில் விசாரணைக் கைதிகளும், தண்டனை பெற்ற கைதிகளும் ஈடுபட்டிருந்ததாக காவல்துறை குறிப்பிட்டது.
போகம்பர திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள்
வன்முறை சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக்கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறையில் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |