வீரம் விளைந்த மட்டக்களப்பாருக்கு ஏன் இந்த நிலை

Sri Lankan Tamils Batticaloa Sonnalum Kuttram
By Vanan Oct 26, 2023 12:17 PM GMT
Report

ஒருகாலம் இருந்தது. மட்டக்களப்பு இளைஞர்களின் வீரத்தை எல்லோருமாக சேர்ந்து வாய்பொத்தி வேடிக்கை பார்த்த காலம் அது.   

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் கூட சிங்கள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக முதன் முதலில் துவக்கெடுத்து துரத்தியவர்களும் மட்டக்களப்பு மக்களே.  இது 1950 களின் இறுதிப்பகுதியில் நிகழ்ந்த விடயம்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் தான் தமிழீழ போராட்ட களங்களில் பல வெற்றிகளை பெற்றுத்தந்தவர்கள் மட்டக்களப்பின் ஜெயந்தன் படையணி போராளிகள். அவர்களின் வருகை எதிர் தரப்பை அடிவயிறு வரை கலங்க வைக்காத நாட்களே இல்லை எனலாம்.   

இப்படியாக வீரத்தின் விளைநிலமாக வீரதீரத்தின் அடையாளமாக பேசப்பட்ட மட்டக்களப்பாரை கருணா என்ற தனிமனிதரின் துரோகச்செயல் ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மக்களின் மீது ஒரு கறையை ஏற்படுத்தியிருந்தது. 

எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நாமலுக்கு பகிரங்க சவால்

எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து நாமலுக்கு பகிரங்க சவால்

கேட்க யாருமில்லை

இது எல்லாம் இன்றும் நாங்கள் மறந்துபோகவேண்டிய கசப்பான உண்மை.   

வீரம் விளைந்த மட்டக்களப்பாருக்கு ஏன் இந்த நிலை | Ampittiya Protest People Of Batticaloa

இப்படியாக, இருந்த அந்த மக்கள் மீது எடுத்தவர் எல்லாம் கை வைக்க நினைப்பதும்,  இரத்த ஆறு ஓடும் என்று சொல்லுவதும், கோவிலை இடித்து சந்தை கட்டுவதும், தலையை வெட்டி கையில் கொடுப்பேன் என்பதுமாக தாயில்லாப்பிள்ளையை கண்டவர் எல்லாம் தலையில் குட்டி விளையாடுவது போல நடந்துகொண்டிருக்கிறார்கள்.   

ஒரு காலமிருந்தது - எமக்கு எங்கள் காவல்தெய்வங்களாக எங்கள் இளைஞர்கள் இருந்தார்கள். நாங்கள் நிம்மதியாய் உறங்க அவர்கள் இராப்பகலாக காவலரன்களில் காவலிருந்தார்கள்.  அது போல ஒரு தலைவன் இருந்தான். அவன் காலத்தில் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இன்னொரு ஈழத்தமிழன் மீது கை வைக்க ஒவ்வொருவரும் பயந்துகொண்டார்கள்.   


அவர் பெயர் சொன்னால் பெட்டிப்பாம்பாக அடங்கிக்கிடந்தார்கள். ஆனால் இன்று பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல,

காவிக்குள் மறைந்திருந்த பிக்கு தொடங்கி காத்தான் குடி அதிபர் வரை தமிழர்களின் நிலங்களை அபகரிப்பது, உடமைகளை ஆக்கிரமிப்பது, உரிமைகளை பறிப்பது என தங்கள் விருப்பத்துக்கு ஆடிக்கொள்கிறர்கள்.

நேற்று ஒட்டுமொத்த தமிழர்களின் தலைகளையும் மட்டக்களப்பில் வெட்டுவேன் என்று கூறிய அம்பிட்டிய தேரரை கேட்கக்கூட யாருமில்லை.

பேருக்கு ஆயிரம் கட்சிகளும் அடியாட்களும் அரசாங்க அமைச்சர்களும் நூறு அமைப்புகளும். ஆனால் இவரின் அராஜகங்களை கேட்க ஆட்களில்லை. 

 மேய்ச்சல்தரைகளை பிடிக்கிறார்கள், மாடுகளைச் சுடுகிறார்கள், மனிதர்களையும் சுட்டார்கள் இப்படிப்போனால் கைபிடி மண்ணும் மிஞ்சாது.


மட்டக்களப்பு மக்களே

எங்கே உங்கள் கிழக்கின் மீட்பர்கள்?  எங்கே உங்கள் மட்டக்களப்பு மண்டேலா?

வீரம் விளைந்த மட்டக்களப்பாருக்கு ஏன் இந்த நிலை | Ampittiya Protest People Of Batticaloa

பிள்ளை கடத்துவதும் ஆட்பிடிப்பும் காட்டிக் கொடுப்பும் தான் கிழக்கின் விடிவா ?

தனிமனித ஆசைக்கு ஒரு இனப்போராட்டத்தையே விலைபேசி விற்ற அந்த மாபாதகர்கள் எங்கே? 

தேசக்கனவோடு வானிலும் மண்ணிலும் கடலிலும் வெடித்துச் சிதறிய அந்த மாவீரத்தெய்வங்களின் சாபத்தால் தான் இப்படி எல்லாம் நடக்கிறதா?

தலைவன் இருந்திருந்தால் கனவிலும் இப்படி ஏதாவது நிகழ்ந்திருக்குமா ?

நீதிபதி சரவணராஜாவுக்காக களத்தில் இறங்கிய புலம்பெயர் தமிழர்கள்

நீதிபதி சரவணராஜாவுக்காக களத்தில் இறங்கிய புலம்பெயர் தமிழர்கள்


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்