இலங்கை வந்த அவுஸ்ரேலிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
இலங்கைக்கு வருகை தந்த அவுஸ்ரேலிய பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கம்பளை - ஹெம்மாதகம வீதியில் அவர் பயணித்த கார் பள்ளத்தில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் இந்த உயிரிழப்பு சம்பவித்துள்ளது.
ஹெம்மாதகம நோக்கி செல்லும் வீதியின் பலத்கமுவ பகுதியில் சாரதியால் காரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சுமார் 12 அடி பள்ளத்தில் கார் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மற்றுமொரு ஆஸி பெண் காயம்
விபத்தில் காரின் சாரதியும் மற்றுமொரு அவுஸ்ரேலிய பெண்ணும் காயமடைந்துள்ளனர்.காரின் சாரதி வத்தளை பிரதேசத்தை சேர்ந்த நபர் எனவும், விபத்தில் காயமடைந்த 30 வயது பெண் கம்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் தூக்க கலக்கம்
உயிரிழந்தவர் அவுஸ்ரேலியாவின் சிட்னியை வசிப்பிடமாக கொண்டிருந்த 67 வயதுடைய பெண் எனவும், சாரதி உறங்கியமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
