எரிபொருள் பெற வரிசையில் காத்திருந்த யானை
எரிபொருள் வரிசையில் யானை
வாகன இலக்கத் தகட்டின் அடிப்படையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு வெளிவந்த போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளாந்தம் வரிசை கட்டுக்கடங்காது செல்கின்றது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பமான சூழலும் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் எரிபொருள் வரிசையில் யானையொன்றும் எரிபொருளுக்காக காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்டியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கதிர்காம பெரஹெர உற்சவம்
கதிர்காமத்தில் நடைபெறவுள்ள பெரஹெர உற்சவத்தில் கலந்துகொள்ளவுள்ள மியன் ராஜாவை ஏற்றிய பாரவூர்தியே வரிசையில் காத்திருந்தது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கதிர்காமத்தை நோக்கி புறப்படுவதற்கு முன்னர் யானையுடன் குறித்த பாரவூர்தி எரிபொருள் வரிசைக்குள் நுழைந்தது.
கண்டி- கட்டுகஸ்தோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது வாய்ப்பு வரும் வரை யானையும் பாரவூர்தியில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
