மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14.05.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரிய வருகையில்,
மட்டக்களப்பு - மொறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய பத்மராஜா டினேஸ் என்பவர், மற்றொருவருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தீவிர தேடுதல் நடவடிக்கை
இந்நிலையில், இன்று (14) காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரை சிறைச்சாலைக்கு வெளியே இடம்பெற்ற கட்டுமானப்பணியில் மேசனாக பணியமர்த்தியிருந்தனர்.
அப்போது அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி தற்போது தப்பியோடிய கைதியை கைது செய்வதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |