நீர்கொழும்பு மோதலின் வெளிவராத ஒரு கதை! நீதியமைச்சரின் சிறப்பு அறிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதலைத் தொடங்கிய கைதிகள் ஆயுதங்களைப் பெற்று, இரும்புக் கதவை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த மோதலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை என்று கூறிய அமைச்சர், சிறைக்குள் போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டுவரும் வழிமுறையைச் சீர்குலைப்பதே இந்த மோதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம் என்றும் மேலும் கூறியுள்ளார்.
ஆயுதமற்ற இரண்டு அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும், அவர்களை மீட்பதற்காக மற்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சிறப்பு விசாரணைக்குழு
மேலும், பெரும்பாலான அதிகாரிகள் செங்கற்கள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீர்கொழும்பு சிறை விவகாரம் குறித்து விசாரிக்க அமைச்சரவையின் ஊடாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாளை சிறை உத்தியோகத்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் என்ற வகையில் முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்கின்றோம். சிறைக்குள் போதைக்கு அடிமையானவர்கள் இருந்துள்ளனர். அவர்களே இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
தகவல் வழங்கிய கைதி
இந்த இடத்தில் கைதி எனவும் அதிகாரி என்றும் தனி தனியே மதிப்பு வழங்க முடியாது. உயிரை காப்பாற்றுவதே எங்கள் நடவடிக்கையாக இருந்தது.

எங்களுக்கு தகவல் வழங்கிய கைதியே முதலில் பாதிக்கப்பட்டார். முதலில் அவரே தாக்கப்படுகிறார். உணவு தங்குமிட பிரச்சினை என சிலர் இதனை திரிபு படுத்துகின்றனர். மனிதாபிமானமற்ற முறையில் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கைதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் எப்படி சென்றது என்பது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் பாதுகாப்புக்காக கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |