பருத்தித்துறையில் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
பண்ணையம்பதி பகுதியில் உள்ள பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபியின் அலுவலகத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்று (19) காலை10:30 மணியளவில் இந்த நினைவேந்நதல் நிகழ்வு இடம்பெற்றது
இதன்போது தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவரால் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
அன்னை பூபதியின் தியாகம்
இதனையடுத்து அன்னை பூபதியின் தியாகம் மற்றும் அவரின் வாழ்க்கை பயணம் பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.
