வீட்டுக்கு முன் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட ராஜிதவின் குற்றச்சாட்டுகள்
தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மாலேபேவில் உள்ள வீட்டிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று சென்றுள்ளனர்.
அதன்போது, குறித்த வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் பிடியாணை அறிவிப்பை ஒட்டியதோடு, ராஜிதவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்தது.
சர்ச்சைக்குரிய ஒப்பந்தம்
இந்த நிலையில், அவர் பல அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டதாகவும், அவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கத் தவறிவிட்டதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.
இதன்படி, ஒரு கொரிய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குறித்த ஒப்பந்தம் அரசுக்கு ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், தொலைபேசி இணைப்புகளை துண்டித்து தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வேண்டுமென்றே கைது செய்யப்படுவதை தவிர்த்து வருதவதாக ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
