அமெரிக்காவிற்கு மேலும் ஒரு தோல்வி! ட்ரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராகப் புதிதாக அறிவித்துள்ள பொருளாதார டி-டே பிரசாரம், அந்நாட்டுக்கு மேலும் ஒரு தோல்வியை கொண்டுவரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.
மேலும் இது அமெரிக்கா மீதான ஈரானியர்களின் விரோதப் போக்கை ஆழப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி நாள் என்று அழைக்கப்படுவது, முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் விண்ணை முட்டும் வட்டிச் செலவுகள் ஆகிய அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகும் என்று அராக்சி விளக்கியுள்ளார்.
தோல்வியடைந்த கொள்கை
மேலும் தோல்வியடைந்த கொள்கைகளைத் தொடர்வது, தோல்வியையும் ஈரானியர்களின் பகைமையையும் மட்டுமே கொண்டுவரும் என்று கூறிய அவர், அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் என்று அவர் குறிப்பிட்டது உலகப் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவுத் துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி இராணுவ ரீதியாகத் தனது இலக்குகளை அடைவதில் தோல்வியடைந்த பின்னர், எஅமெரிக்கா ஒரு “பொருளாதாரப் போரை” நாடியுள்ளது என்று கூறினார்.
ஈரான் தோல்வியின் விளிம்பில் இருப்பதாகவும், நூலிழையில் தொங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள், ஆனாலும் தங்களின் அனைத்து நட்பு நாடுகளிடமும் தங்களுக்கு உதவுமாறு கெஞ்சுகிறார்கள் என்று கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |