இலங்கையில் மற்றுமொரு மருத்துவரை பலியெடுத்தது கொரோனா
srilanka
corona
death
doctor
By Sumithiran
இலங்கையில் மற்றுமொரு மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் சுதத் பண்டார என்பவரே கொரோனா தொற்றினால் உயிரிழந்தவராவார்.
57 வயதான இவர் அதே மருத்துவமனையில் கொவிட் நோயாளர்கள் சிகிச்சைப் பிரிவில் சேவையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுகஸ்தோட்டை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.