மற்றுமொரு வர்த்தமானி வெளிவந்தது
வரியில் இருந்து விலக்கு
உள்ளூர் சானிட்டரி நாப்கின்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், உள்நாட்டு சானிட்டரி நாப்கின்கள் உற்பத்திக்குத் தேவையான பாலிஎதிலீன் பிலிம்கள் மற்றும் பாலிப்ரொப்பிலீன் பிலிம்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மூலப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரை
கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பேரில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலின் கீழ் உரிய பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்யும் வசதி இதன் மூலம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகரிப்பு காரணமாக, அதனுடன் தொடர்புடைய பொருட்களின் மூலப்பொருட்களுக்கான வரியை நீக்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் தீர்மானித்திருந்தார்.
இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன், இதன் காரணமாக சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
