நள்ளிரவில் தமிழர் பகுதியில் பரபரப்பு - காவல்துறையினரால் மற்றொரு துப்பாக்கிச் சூடு..
தமிழர் பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்றின் மீது காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு கிளிநொச்சி (Kilinochchi) - தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், நள்ளிரவு 12.45 மணியளவில், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு
இதன்போது, துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தின் சக்கரத்தில் சிதைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், குறித்த கெப் ரக வாகனத்தின் உரிமையாளரால், கடந்த வாரம் டிப்பர் வாகனத்தில் மண் கொண்டு செல்லப்பட்ட போதும் தர்மபுரம் காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில், கடந்த 10ஆம் திகதி அதிகாலை 1.18 மணியளவில் யாழ். மண்டைதீவு பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |