நினைவேந்தல் கைது விவகாரம்: அரசின் திட்டம் இது தான் என்கிறார் ஜனா எம்.பி

Sri Lanka Police Tamils Batticaloa Northern Province of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Shadhu Shanker Dec 18, 2023 01:17 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுப்பட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்து எமது உணர்வுகளை அடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா தெரிவித்துள்ளார்.

தடுப்புச் சட்டத்திற்குள் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்த ஆண்டு இந்த வேலைகளை யாரும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பதற்காக கைதுகளை செய்திருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த 11-ம் மாதம் 26 27ஆம் திகதிகளிலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு 11 பேர் சிறையில் இருக்கின்றார்கள்.

திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி: வெளியான காரணம்

திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி: வெளியான காரணம்

மாவீரர்கள் தினம்

உண்மையிலேயே நகுலேஷ் அவர்கள் இறந்த மாவீரர்கள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் கொடுத்ததற்கும், வாடகைக்கு வண்டி செலுத்தி தரவை மாவீரர் துயிலும் இல்லத்திற்கு ஸ்பீக்கர் போன்ற பொருட்களை ஏற்றி சென்றதற்காகவும் அதைவிட இன்னும் ஒரு மோசமான ஒரு நிகழ்வு கருவாக்கணியில் நடந்திருக்கின்றது. இருவருக்கிடையிலே வாக்குவாதம் சண்டை ஏற்பட்டு இருக்கின்றது.

நினைவேந்தல் கைது விவகாரம்: அரசின் திட்டம் இது தான் என்கிறார் ஜனா எம்.பி | Anti Terrorism Act Maverar Day Arresest Ltte Tamil

அந்த சண்டையிலே ஒருத்தர் காவல்துறை நிலையம் சென்று மாவீரர்கள் நிகழ்வுக்காக பணம் கேட்டதாக முறைப்பாடு ஒன்றை வேண்டுமென்று செய்திருக்கிறார்.

அவருக்கு எதிராகவும் ஒரு திட்டமிட்ட செயலாகத்தான் நான் பார்க்கின்றேன். ஏனென்றால் இந்த முறை 10 /12 பேரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குள் வெளிவராத முறையில் கைது செய்து சிறையில் அடைத்தால் அடுத்த ஆண்டு இந்த வேலைகளை யாரும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பதற்காக கைதுகளை செய்திருக்கின்றார்கள்.என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!

நெருங்கும் சனிப் பெயர்ச்சி : தலையெழுத்தே மாறப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா..!

பயங்கரவாத தடைச் சட்டம்

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை புலிகள் சம்பந்தமான பதாகைகள் எதையுமே வைத்திருக்காமல் அவர்கள் தங்களுடைய உறவுகளை நினைவு கூறுவதற்காக சென்ற வேளையிலே அல்லது பங்கு பற்றிய வேளையிலே அவர்களை கைது செய்தது என்பது உண்மையிலேயே ஏற்க முடியாது ஒரு விடயமாக இருக்கின்றது.

நினைவேந்தல் கைது விவகாரம்: அரசின் திட்டம் இது தான் என்கிறார் ஜனா எம்.பி | Anti Terrorism Act Maverar Day Arresest Ltte Tamil

அரசு சொல்லி இருக்கின்றது இந்த நாட்டிலே மரணித்தவர்களை தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பதாகைகள் அவர்களது கொடிகள் இல்லாமல் நினைவு கூறுவதற்கு எந்த தடையும் இல்லை.

என்று அரசாங்கமும் அதிபரும் கூறி இருக்கும் இந்த வேலையில் அப்படி எதுவுமே செய்யாமல் அந்த மாவீரர்களை நினைவுகூர்ந்தவர்களையும் அவர்களது பெற்றோர்களை கௌரவித்தவர்களையும் பேக்கரியில் கேக் விற்றவரையும் குடும்பச் சண்டையிலே ஈடுபட்டவர்களையும் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்வது என்பது அதுவும் பயங்கரவாதத்தை கைது செய்வது ஏற்க முடியாது ஒரு விடயமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

ஐபிஎல் ஏலம் 2024: இம்முறை கோடிகளை குவிக்கப்போவது யார்.!

ஐபிஎல் ஏலம் 2024: இம்முறை கோடிகளை குவிக்கப்போவது யார்.!

நினைவுகூர்வதற்காக உரிமை 

இந்த நாட்டில் வடகிழக்கில் மாத்திரமல்ல இந்த முழு நாட்டிலுமே பிரச்சினைகள் உருவாகி இருக்கின்றது உரிமைகளை பெறுவதற்காக மக்கள் போராடி இருக்கின்றார்கள்.

நினைவேந்தல் கைது விவகாரம்: அரசின் திட்டம் இது தான் என்கிறார் ஜனா எம்.பி | Anti Terrorism Act Maverar Day Arresest Ltte Tamil

மரணித்திருக்கின்றார்கள் அந்த வகையில் அவர்களை நினைவு கூறுவது என்பதை அரசாங்கம் எக்காரணம் கொண்டும் தடை செய்ய முடியாது.

அதேபோன்று எங்களது மக்கள் கூட நீங்கள் எத்தனை தடையை விதித்தாலும் அவர்களை நினைவு கூறுவதை விட மாட்டார்கள் என்பதை நான் மிகவும் ஆணித்தனமாக கூறிக் கொள்வது மாத்திரமில்லாமல் நான் கூட இன்று நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுதான் இருக்கின்றேன்.

அங்கு கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக நினைவேந்தி எனக்கும் எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு தற்போதும் நான் நீதிமன்றங்களுக்கு சென்று கொண்டு தான் வருகின்றேன்.

கைது செய்தவர்களின் உறவினர்கள்

அந்த வகையில் எங்களது மக்களது உணர்வுகளை நீங்கள் இந்த அரசோ அல்லது அரசாங்கமோ அல்லது பாதுகாப்பு படையோ மழுங்கடிக்கலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் .

கைது செய்தவர்களின் உறவினர்கள் மரணித்திருக்கின்றார்கள் அவர்களை நினைவுகூர்வதற்காக அவர்களது குடும்பத்தை நெருக்கடியாக்கி பயங்கரவாத தடை சட்டத்திற்குள் கைது செய்தமை ஏற்க முடியாத விடயம்.

நினைவேந்தல் கைது விவகாரம்: அரசின் திட்டம் இது தான் என்கிறார் ஜனா எம்.பி | Anti Terrorism Act Maverar Day Arresest Ltte Tamil

எதிர்வரும் 21ஆம் திகதி அதிபர் அவர்கள் வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிற்பகல் 3 மணிக்கு சந்திக்கவிருப்பதாக இன்று மதியம் செய்தி அனுப்பி இருக்கின்றார்.

நிச்சயமாக 21ஆம் திகதி 3 மணிக்கு நாங்கள் அதிபரை சந்திப்போம் அவரிடம் நாங்கள் இந்த பிரச்சினையை மிகவும் ஆணித்தரமாக கூறுவோம்என்ன சொல்லுகின்றார் என்று பார்ப்போம் .

இருந்தாலும் அவரது கூற்று கூட அவரது உத்தரவுகள் கூட பாதுகாப்பு படையினாலும் மற்றும் அரசு அதிகாரிகளினாலும் நிறைவேற்றப்படுவதாக கடந்த காலங்களிலே எங்களுக்கு தெரியவில்லை இருந்தாலும் இந்த பயங்கரவாதத்தை திட்டத்திற்கு கீழே கைது செய்யப்பட்டு இருக்கும் இந்த எங்களது உறவுகள் சம்பந்தமாக 21ஆம் திகதி நாங்கள் அதிபருடன் பேசுவோம்" என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி