தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜே.வி.பி போட்டுடைக்கும் விடயம்!

Vavuniya Anura Kumara Dissanayaka Sri Lanka Janatha Vimukthi Peramuna
By Eunice Ruth May 26, 2024 11:32 PM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் காணப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

தெற்கில் தமது மக்கள் அழிக்கப்படுவது மற்றும் வடக்கில் நூலகத்தை எரித்தமை ஆகியவற்றை முன்னிறுத்தி குறித்த நடவடிக்கையை தலைவர் பிரபாகரன் முன்னெடுத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் உள்ள இரட்டைபெரியகுளம் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற கட்சியின் மகளிர் மாநாட்டில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இனவாதம்

இதன் போது மேலும் உரையாற்றிய அவர், “ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் பாரிய இனவாதத்தை தூண்டி, மாபெரும் யுத்தத்தை உருவாக்கினார்கள். அது தானாக உருவான யுத்தம் அல்ல. வடக்கு - தெற்கிலுள்ள அரசியல்வாதிகள் பதவிக்காக மேற்கொண்ட யுக்தியினால் உருவான யுத்தம்.

தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜே.வி.பி போட்டுடைக்கும் விடயம்! | Anura Kuma Dissanayake Reveals Leader Prabhakaran

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்: தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்: தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை!

தலைவர் பிரபாகரனால் தற்கொலை குண்டுதாரிகள் உருவாவதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, 1981 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு சென்று யாழ். நூலகத்தை எரித்தார்கள். தேர்தலுக்காக, வாக்குகளை பெறுவதற்காக நூலகத்தை எரித்த சம்பவத்தை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?  

வடக்கில் உள்ள தமிழ் மக்கள் வாசிப்பு பழக்கத்துடன் மிகவும் நெருக்கமானவர்கள். குறித்த மக்கள் யாழ். நூலகத்துக்குச் செல்கையில், தெய்வ ஸ்தலங்களுக்கு செல்வதைப் போன்று தமது காலணிகளை வெளியில் விட்டுவிட்டுச் செல்வதை நான் கண்டுள்ளேன்.

வடக்கு மக்களுக்கும் யாழ். நூலகத்துக்கும் இடையில் அவ்வாறானதொரு ஒற்றுமையிருந்து. ஆனால், ரணில் விக்ரமசிங்கவின் குழுவினர், 1981 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி காண அந்த நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள்.

ஜே.வி.பி மீதான தடை

தெற்கிலுள்ள அரசாங்கம் தமது நூலகத்தை தீயிட்டு எரிப்பதனை நினைத்து தமிழ் மக்கள் வேதனைப்பட்டார்கள். இதனை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு முக்கியமான சம்பவமொன்று நிகழ்ந்தது.

தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜே.வி.பி போட்டுடைக்கும் விடயம்! | Anura Kuma Dissanayake Reveals Leader Prabhakaran

கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர

கட்சித்தாவும் ஜே.வி.பியினர்! வதந்திகளை நிராகரிக்கும் அனுர

மக்கள் விடுதலை முன்னணியுடன், மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதைக் கண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன பயந்து, எமது கட்சியின் பயணத்தை ஒழிக்க முடிவு செய்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியலுக்கு தடையாக இருந்தது. அதனால், அவர் எம் கட்சியை தடைசெய்ய முயற்சித்தார்.

கறுப்பு ஜுலை

இதனால், ஜே.ஆர்.ஜெயவர்தனவும், ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து 1 ஆம் மற்றும் 2 ஆம் குறுக்குத் தெருவுக்கு தீவைத்தார்கள். ஒரு கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள்.

தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜே.வி.பி போட்டுடைக்கும் விடயம்! | Anura Kuma Dissanayake Reveals Leader Prabhakaran

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிபர் தேர்தலில் ரணிலின் நிலைப்பாடை அறிவிக்கும் ஹரின்

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிபர் தேர்தலில் ரணிலின் நிலைப்பாடை அறிவிக்கும் ஹரின்

அநுராதபுரம் சிற்றம்பலம் மண்டபத்தை தீயிட்டு கொழுத்தினார்கள். முழு நாடும் தீப்பற்றி எரிந்தது. இதனை ஜே.ஆர் ஜெயவர்தனவின் அடியாட்களே செய்தார்கள்.

ஆனால், 1983 ஆம் ஆண்டின் கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியினரே காரணம் என எம் கட்சியை தடை செய்தார்கள். இதனால், தெற்கில் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதையும், உயிர் காவுக்கொல்லப்படுவதையும், தெற்கிலிருந்து தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்படுவதையும் நினைத்து, பிரபாகரனுக்கு வடக்கில் புதிய அரசாங்கமொன்று உருவாக்க வேண்டிய தேவையேற்பட்டது.

யுத்தத்துக்கான அழைப்பு 

இதனால், தெற்கில் தமது மக்கள் அழிக்கப்படுவதையும், வடக்கில் நூலகத்தை எரித்தமையும் கூறி வடக்கு இளைஞர்களை யுத்தத்துக்காக அழைத்தார்.

தலைவர் பிரபாகரன் தொடர்பில் ஜே.வி.பி போட்டுடைக்கும் விடயம்! | Anura Kuma Dissanayake Reveals Leader Prabhakaran

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை! சுமார் 59 மரங்கள் முறிந்து விபத்து

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை! சுமார் 59 மரங்கள் முறிந்து விபத்து

ஆயுதமேந்திய மாபெரும் இயக்கத்தை பிரபாகரன் உருவாக்கினார். இதில் சாதாரண தாய் தந்தைகளின் பிள்ளைகளின் உயிர்களே பறிபோயின. இந்த நாட்டிலுள்ள சிங்கள கிராமங்கள் அச்சத்துடன் காணப்பட்டன.

அவர்களின் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்தனர். மேலும், வுவனியாவை சற்று தள்ளி வாழும் தமிழ் மக்களும் பயத்துடனே வாழ்ந்தார்கள்.

காலத்தின் தேவை

அவர்களின் பிள்ளைகளும் விடுதலைப் புலிகளுடன் இணைந்தார்கள். மேலுள்ள ஆட்சியாளர்கள் யுத்தம் செய்தார்கள். எமது கிராமங்கள் பாதுகாப்பற்று காணப்பட்டது. மேல் உள்ள ஆட்சியாளர்கள் யுத்தத்தை உருவாக்கினார்கள். எமது பிள்ளைகள் யுத்தத்துக்கு சென்றார்கள்.

இலங்கையின் அரசியலில் பாரிய சதி! குற்றம் சாட்டும் மொட்டு எம்.பி

இலங்கையின் அரசியலில் பாரிய சதி! குற்றம் சாட்டும் மொட்டு எம்.பி

இவ்வாறான சூழ்நிலையில், எமது நாடு முன்னேற வேண்டுமாயின் பிரதான சில விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கமைய, தற்போது நமக்கு வன்முறையற்ற ஒரு நாடு தேவை. பிரிவினைவாதமில்லாத, மீண்டும் யுத்தம் ஏற்படாத நாடே காலத்தின் தேவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுயுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

எமது பரம்பரை யுத்தம் செய்துக் கொண்ட பரம்பரை. ஆனால் எமது பிள்ளைகளுக்கு யுத்தம் செய்துக் கொள்ள இடமளிக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார். 

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை : சஜித்

நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை : சஜித்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011