சிறிலங்காவுக்கு பாகிஸ்தானின் ரி-20 ராஜதந்திர அடி! டெல்லியில் ஜேவிபிக்கு இந்தியத் தூண்டில்!
இலங்கையின் உள்ளூர் அரங்கில் தினுசு தினுசான வெறுப்பு அரசியல் எதிரொலித்துவரும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறுவயதில் வசித்த அவரது வல்வெட்டித்துறை பூர்வீக இல்லத்தை புதுப்பிக்க அநுர அரசாங்கம் முயலவதாக ராஜபக்ச தரப்புக்கு சளைக்காத வகையில் சஜித் அணி புதிய கொள்ளியை செருகி இனவாத கிறடிற்றை பெறத்தலைப்படுகிறது.
இதேசமகாலத்தில் ராஜபக்கசக்களின் தலையான மகிந்தவின் பெயரை கூறும் போது அநுர தரப்பு சிறுநீர் கழிக்கும் என்ற பதில் கொள்ளிகளும் தமிழ் சுயேச்சையிடம் இருந்து வருகின்றது.
சிறிலங்காவின் ஆட்சித்தலைவர் அநுரவின் பலமும் பலவீனமும் அவரது வார்த்தை ஜாலங்களாக இருப்தை, முன்னைய ஆட்சித்தலைகள் தமது உள்ளூர் வான்மார்க்க பயணங்களில் இரண்டு உலங்கு வானூர்த்திகளை பயன்படுத்தியதை கேலிசெய்த அவரே தற்போது தனது வான்மார்க்கப் பணயங்களில் இரண்டு ஹெலிகளை பயன்படுத்தும் யதார்த்த்தில் வந்து நிற்கிறது.
இதேபோல ஒரு காலத்தில் இந்தியாவை எதிரி என முழங்கிய அவரது ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் சிஸ்ரம் சேஞ் தமிழ்முக இளங்குமரன் சகிதம் டெல்லியில் நின்றதையும் காணமுடிந்தது.
இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் அதகளமாக ஆரம்பிக்கும் 10வது ரி20 உலகக்கிண்ண சுற்றுப்போட்டி அதன் வரலாற்றில் இதுவரை கண்டிராத சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இலங்கையில் வைத்து இந்தியாவுடன் விளையாட மறுத்த பாகிஸ்தானின் திடீர் முடிவு இரண்டு நாடுகளுடன் நண்பேன்டா உறவு நிலையை பேணும் சிறிலங்காவுக்கும் பெரும் சங்கடமாக மாறியுள்ள நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 3 மணி நேரம் முன்