பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை: அணிவகுப்பில் வெளியான உண்மை
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Anuradhapura) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 10 திகதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பெண் வைத்தியரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து, அநுராதபுரம் மற்றும் கல்னேவ காவல் நிலைய அதிகாரிகள், அநுராதபுரம் சிறப்பு அதிரடிப் படையினரால் கல்னேவ காவல் பிரிவில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர்
அத்துடன், கல்னேவ, எல வீதியில் வசிக்கும் 34 வயதுடையவர் சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (28.03.2025) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
