யுத்தத்தில் இராணுவம் இழைத்த குற்றம்- சீரழிக்கப்பட்ட வைத்தியர்: யாழில் எழுந்த கண்டனக் குரல்
எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நேரிட்டது என யாழ் (Jaffna) தீவக பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என தீவக பெண்கள் வலை அமைப்பின் ஊடாக ஊடக சந்திப்பொன்று நேற்று (17) இடம்பெற்றது.
இதில், கலந்துகொண்டு கருது தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் புதிய அரசாங்கம் அதாவது பெண் பிரதமர் பதவியேற்றதன் பின்னர் மகளிர் தின மகத்தான மாதத்தில் அனுராதபுரத்தில் (Anuradhapura) முன்னாள் இராணுவ வீரரினால் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவமானது ஒட்டுமொத்த நாட்டின் பெண்களின் பாதுகாப்புக்கு சவால் விடுப்பதாகவும் நாட்டின் சட்டம் ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தும் விடயமாக பார்க்கிறோம்.
கலாச்சார அபிவிருத்தி
ஒரு நாடு சமூக பொருளாதார கலாச்சார நீதியாக அபிவிருத்தி அடைய வேண்டுமானால் அந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டில் புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்றுள்ளது பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற மகிழ்ச்சியான நிலைப்பாடு தற்போது அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை மூலம் பெண்கள் மத்தியில் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச நீதியை தமிழ் மக்கள் கேட்டிருக்கின்ற நிலையில் குறித்த சம்பவத்தை சர்வதேசம் உற்று நோக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்