கோட்டாபய தொடர்பில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால்(gotabaya rajapaksa) வெளியிடப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்தது.
மேலும், அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடிப்படை உரிமைகளை மீறிய கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதிகாரமின்றி தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்ததன் மூலம் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஹெரோயின் வைத்திருந்ததற்காக பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஹெனேகம, பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த எம்.கே.பிரியதர்ஷனி மதுரப்பெரும தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்து தீர்ப்பை அறிவித்த பின்னர் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். துரேராஜா, திலீப் நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன் விசாரிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்