தேர்தலில் ரணில் செய்யும் சூழ்ச்சி! வீடு செல்ல நேரிடும் என எச்சரிக்கும் அனுர

Anura Dissanayake Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna Election
By Shadhu Shanker Feb 19, 2024 04:05 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கை அதிபர் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்தாவிட்டால் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை வழங்கினார்கள்.

உலகின் மிக பழமையான மொழி எது தெரியுமா...!

உலகின் மிக பழமையான மொழி எது தெரியுமா...!

உரிய நேரத்தில் தேர்தல்

இதனால் என்ன பயன் கிடைக்கப் பெற்றது என்பதை குருநாகல் மாவட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய மக்களாணை இன்று முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

anura president election

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனி ஆசனத்துடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார். நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்றார் என்று பொதுஜன பெரமுனவினர் தற்போது புகழ்பாடுகிறார்கள்.

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டபய ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். அவர் அதனை ஏற்கவில்லை. அதன் பின்னர் கோட்டபய ராஜபக்ச,சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்தார்.

மீண்டும் யாழில் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா

மீண்டும் யாழில் கௌரவிக்கப்பட்ட கில்மிஷா

நெருக்கடியை சமாளிக்க முடியாத  கோட்டாபய

மூன்று நாட்களுக்கு பின்னர் பதிலளிப்பதாக அவர் குறிப்பிட்டார். மூன்று நாட்கள் கூட நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலையில் கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தார் அவர் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

gotta president election 2024 pjp

2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரசாரங்களில் 'மத்திய வங்கியின் பிரதான சூத்திரதாரியான ரணிலை சிறைக்கு அனுப்புவோம்' என்பது பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் வாக்குறுதியாக அமைந்தது. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே 2019 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மக்கள் ராஜபக்சர்களுக்கு ஆணை வழங்கினார்கள்.

ஆகவே தனக்கு எதிரான மக்களாணையில் ஆதிக்கம் செலுத்துவதையிட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க வெட்கப்பட வேண்டும். ராஜபக்சர்களின் நம்பிக்கையான பாதுகாவலன் ரணில் விக்ரமசிங்க என்பதால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்தது.

அதிபர் தேர்தல்

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதமளவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தான் நிறைவேற்று அதிகாரமிக்க அதிபர் முறைமை என்பதொன்று நாட்டில் நடைமுறையில் உள்ளது என்பது அதிபருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

ranil srilanka election 2024

நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் முறைமை தேவையா, இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்மானிக்க முடியாது.

அதிபர் தேர்தலை பிற்போட்டு தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள அதிபர் முயற்சித்தால் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் வீடு செல்ல நேரிடும். அதிபர் மற்றும் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்தாவிடின் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025