காவல்துறையில் இணைக்கப்படவுள்ள 10,000 பேர் : அமைச்சர் அறிவிப்பு
காவல்துறை திணைக்களத்தில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் காவல்துறை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலமாக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பதவியுயர்வுகளை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
உயர்தர தொழில்முறை சேவை
காவல்துறை சேவையை தர ரீதியாகவும், உயர்தர தொழில்முறை சேவையாகவும் மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைய, காவல் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |