நாமலுக்கு ஆதரவளிக்க தயார்! அர்ச்சுனா வெளிப்படை
எதிர்வரும் காலங்களி்ல் நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என்றும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் முழு ஆதரவையும் வழங்குவேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“2028 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார்.
தமிழர்களிடையே வைராக்கியம்
இது தொடர்பில் சில விடயங்களை அவரிடம் அண்மையில் கலந்துரையாடினேன்.
இதன்போது, அவரது தந்தையை போல மோசடிகளை செய்ய வேண்டாம் என கூறினேன்.
உங்கள் தந்தை பெரியப்பா, சித்தப்பா போன்றோர் மரணிப்பது தொடர்பான வைராக்கியம் தமிழர்களிடையே காணப்படகின்றது என்பதை எடுத்துக்கூறினேன்.
அத்தோடு , நாமல் அவ்வாறு ஜனாதிபதியானால் எனது முழு ஆதரவையும் அவருக்கு வழங்வேன்.
தமிழ் சிங்கள பிரச்சினை
இதன்போது நாமல், தான் ஜனாதிபதியானால் தமிழ் சிங்கள பிரச்சினையை முதலில் தீர்த்துவைப்பேன் என உறுதியளித்தார்.
மேலும், தனது தந்தை விட்ட பிழைகளை தான் செய்யபோவதில்லை என்றார்.
இங்கு ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும். நாடாளுமன்றில் உருவாகும் அரசியல்வாதிகளுக்கிடையிலான சண்மைகள் முன்னதாக பேசிவைக்கப்பட்டவையே.
இதனை பார்த்து மக்கள் வீட்டில் இருந்து கைத்தட்டி சிரிக்கின்றனர்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
