மூடப்படுகிறதா மதுபானசாலைகள்?
sri lanka
people
poya day
By Shalini
மதுபானசாலைகள் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பூரணை தினம் உள்ளடங்கலாக இரு தினங்களுக்கு உரிமம் பெற்ற மதுபானசாலைகள் மூடப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பூரணை தினமான எதிர்வரும் 20 ஆம் திகதி மாத்திரமே மதுபானசாலைகள் மூடப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.