மட்டக்களப்பில் திட்டமிடப்படாத அபிவிருத்தி தொடர்பில் அரியநேத்திரன் விசனம்

Batticaloa P Ariyanethran Climate Change Current Political Scenario
By Shalini Balachandran Nov 30, 2024 12:50 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திட்டமிடப்படாத வீதியபிவிருத்தி, மற்றும் வடிகாலமைப்புக்கள் இன்மை, போன்ற அபிவிருத்திகள் காரணமாகத்தான் மாவட்டத்தின் கிராமப்புறங்களும், நகர்புறங்கள் உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்தில் மக்கள் எதிர்கொண்ட வெள்ள நிலமைகள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்காக நேற்று (29) அவர் அப்பகுதிக்கு சென்றிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழில் நகரசபை நூலகத்தில் பசுவை இறைச்சியாக்கிய கொடூரம் : மூவர் கைது

யாழில் நகரசபை நூலகத்தில் பசுவை இறைச்சியாக்கிய கொடூரம் : மூவர் கைது

போக்குவரத்து மார்க்கங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலத்தைப் பெறுத்தவரையில் பட்டிருப்பு போரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, வவுனதீவு வலையிறவு பிரதான வீதி, மற்றும் அப்பிளாந்துறை குருக்கள்மடம் படகுப்பாதை, மண்டூர் குருமன்வெளி படகுப்பாதை ஆகிய போக்குவரத்து மார்க்கங்கள் அமைந்துள்ளன.

இப்போக்குவரத்து மார்க்கங்கள் ஊடகாக இப்போது நோய்காவு வண்டிகள் மற்றும் மக்களும் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றன மக்கள் பொதுவாக உழவு இயந்திரத்தில்தான் பயணித்து வருகின்றார்கள்.

மட்டக்களப்பில் திட்டமிடப்படாத அபிவிருத்தி தொடர்பில் அரியநேத்திரன் விசனம் | Ariyanetran Laments Unplanned Development Batti

அம்பிளாந்துறைக் கிராமத்திலே வியாழக்கிழமை தாய் ஒருவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டு உழவு இயந்திரத்திலேயேதான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற சம்பவமும் பதிவாகியது.

எனவே கடந்த ஜனாதிபதிகளின் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, முறையான திட்டமிடல்கள் இல்லாதல், வடிகால்கள் இன்றி வீதிகள் அமைத்தல், குளங்களை நிரப்பி வீடுகள் அமைத்தல், போன்ற அபிவிருத்திகளை செய்தமையே வருடாந்தம் இவ்வாறு மாவட்டம் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. இவற்றுக்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரிரு நாட்களுக்குப் பெய்யும் மழையால் தொடர்ச்சியாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாற்றத்தைக் கொண்டு வருகின்றோம் என்றுதான் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது மாற்றம் என்பது ஊழலை ஒழிப்பது என அவர்கள் தெரிவிக்கின்றார்கள் ஊழலை ஒழிப்பது மாத்திரம் மாற்றமல்ல, அபிவிருத்தி எனும்போது இவ்வாறான மாற்றங்களையும் செய்து அதுதொடர்பிலும் மாற்றங்களை முதலில் கொண்டுவர வேண்டும்.

சீன தூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்க கூடாது : கடுமையாக சாடிய எம்.பி

சீன தூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்க கூடாது : கடுமையாக சாடிய எம்.பி

தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி கட்சி வடகிழக்கில் இருந்தும் பெருவாரியான வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்கள் வடகிழக்கிலே 75 வருடகாலமாக இருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வைக்கூட அவர்கள் இதுவரையில் பேசவில்லை.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையை பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் அவர் அதைப்பற்றி கதைக்கவில்லை. அவர் ஊழலைப்பற்றியும் வேறு விடயங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தாரே தவிர இனப்பிரச்சனை ஒன்று இருக்கின்றது அதற்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கூட தற்போதைய ஜனாதிபதி அவரது வாயால் கூறவில்லை.

மட்டக்களப்பில் திட்டமிடப்படாத அபிவிருத்தி தொடர்பில் அரியநேத்திரன் விசனம் | Ariyanetran Laments Unplanned Development Batti

இவ்விடயத்தையும் கருத்திற்கொண்டு இயற்கை அனர்த்தங்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வடிகான் வசதிகளையும் அமைத்து இலகுவில் நீர் வடிந்தோடும் வழிவகையையும், ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை தற்போதைய அரசுக்கு உள்ளது.

அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. முன்பிருந்த இராஜாங்க அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மிகவும் மோசமான முறையில் மண் அகழ்வுகளுக்காக அவர்களது உறவினர்களுக்கு அனுமதிப்பதிரங்களை வழங்கி மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு அதனை தென் பகுதிக்கு அனுப்பியிருந்தார்கள்.

அதன் காரணமாகவும் வெள்ளம் மாவட்டத்தின் பல இடங்களில் சூழ்ந்திருக்கின்றது. எனவே மண் அகழ்வுகளை திட்டமிட்ட வகையில் மேற்கொள்ள வேண்டுமே தவிர அரசியல் இலாபம் தேடுவதற்காகவும், ஒருசிலர் உழைப்பதற்காகவும் இவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

சீன தூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்க கூடாது : கடுமையாக சாடிய எம்.பி

சீன தூதுவர் இனவாதக் கருத்துக்களை விதைக்க கூடாது : கடுமையாக சாடிய எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026