யாழில் ஒமிக்ரோன் தொற்றினை கட்டுப்படுத்த களமிறங்கியது இராணுவம்! (படங்கள்)
ஒமிக்ரோன் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மூன்றாவது கட்ட பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் நாட்டில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓமிக்ரோன் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையிலும் பொதுமக்கள் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில் இராணுவத்தினரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.