யாழில் கசிப்புடன் கைதான 34 வயது பெண்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Jaffna
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கசிப்புடன் 34 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் வீட்டில் சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது அவரிடம் இருந்து 19 ஆயிரத்து ஐநூறு மில்லிலீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்