பொலிஸ் அதிகாரியின் மனைவியும், ஒரே மகனும் கொரோனாவால் மரணம்!
corona
police
sri lanka
boralasgamuwa
By Shalini
பொலிஸ் தலைமையகத்தில் உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் (ASP) மனைவி மற்றும் ஒரே மகன் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
57 மற்றும் 26 வயதுடைய இருவரும் எட்டு நாட்களுக்குள் இறந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
பொரலஸ்கமுவ, ரத்னாபிட்டிய, திவுல்பிட்டியவில் வசிக்கும் ASPயின் மனைவி 8 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மற்றும் அவரது மகன் நோய்த்தொற்றுக்கு ஆளாகி 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்ட அதிகாரி தற்போது குண்டசாலை பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த அவருடைய மனைவி மற்றும் மகனின் இறுதிச் சடங்குகள் தெஹிவளையில் உள்ள மயானத்தில் நடைபெற்றன.