திஸ்ஸவின் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறித்த ஜோதிடர்!
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனியார் வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை ஒன்றின் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயத்துக்கு இரத்தத்தை வழங்கும் 3 இரத்த நாளங்களில் ஒன்று அடைபட்டது மேலும் இதயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவதைப் பாதிக்கும் பெருநாடி வால்வும் அடைபட்ட காரணத்தினால் அவர் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகநூல் பதிவு
குறித்த சத்திரசிகிச்சை தொடர்பில் முகநூல் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

தனது அறுவை சிகிச்சை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் முன்னதாக தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தனது அறுவை சிகிச்சை தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களில், “ஒரு நல்ல நேரம் இருக்கிறதா என்று நான் தொடர்புடைய ஜோதிடரிடம் கேட்டேன்.
அவரது கருத்துப்படி, எனது அறுவை சிகிச்சைக்கு சிறந்த நேரம் அன்று காலை 9.30 மணிக்குப் பிறகு என கூறினார்.
இது என்னால் மாற்ற முடியாத ஒன்று. ஆனால் கடைசி நேரத்தில் எனது அறுவை சிகிச்சையை இன்னும் இரண்டரை மணி நேரம் தாமதப்படுத்துமாறு மருத்துவர் என்னிடம் கேட்டபோது நான் ஆச்சரியப்பட்டேன்.
மருந்து நிபுணர்
அறுவை சிகிச்சை அறையில், மயக்க மருந்து நிபுணர் என்னை மயக்க மருந்துக்குத் தயார்படுத்தி பல கேள்விகளைக் கேட்டார்.
நான் அவுஸ்திரேலியா செல்ல விரும்புகிறேன் என்பதே எனது பதில். மருத்துவர் ஏன் என்று என்னிடம் கேட்டபோது, என் மகள் மற்றும் மகன் அவுஸ்திரேலியா வில் உயர்கல்வியை முடித்துள்ளனர் என்று சொன்னேன்.
எனவே அவுஸ்திரேலியாவுக்குப் போகலாம். நான் ஒரு விமானத்தில் ஏறியதாக கற்பனை செய்து பார்க்க மருத்துவர் என்னிடம் கூறினார்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்