மட்டக்களப்பில் சி.ஐ.டி அதிகாரிகளால் தாக்குதலுக்குள்ளான புகைப்படக் கலைஞர்கள்

Batticaloa Eastern Province
By Bavan Jan 19, 2026 01:30 PM GMT
Report

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட கமரா அடங்கிய பையைத் தேடிச் சென்ற புகைப்படக் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி) அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை நாவலடி கடற்கரைப் பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த கல்லடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் குழுவினர், தவறுதலாகத் தமது கமரா மற்றும் உபகரணங்கள் அடங்கிய தோல்பையை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இரவு 8 மணியளவில் பையைத் தேடிச் சென்றபோது, அங்கிருந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் மீது Torch Light வெளிச்சம் பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் கொள்கையில் அரசாங்கம்: இனவாதத்தை கக்கும் வீரசேகர!

விடுதலைப்புலிகளின் தலைவரின் கொள்கையில் அரசாங்கம்: இனவாதத்தை கக்கும் வீரசேகர!

சி.ஐ.டி அதிகாரிகள்

இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர், "நாங்கள் சி.ஐ.டி அதிகாரிகள், ஏன் எங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சினாய்?" எனக் கேட்டுத் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பில் சி.ஐ.டி அதிகாரிகளால் தாக்குதலுக்குள்ளான புகைப்படக் கலைஞர்கள் | Attack By Cid Officers In Batticaloa

தகவலறிந்து அங்கு வந்த ஏனைய புகைப்படக் கலைஞர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர் மீதும் குறித்த குழுவினர் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு அஞ்சி புகைப்படக் கலைஞர்கள் தமது கைத்தொலைபேசிகள் மற்றும் கமராக்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

காவல் நிலையத்தில் முறைப்பாடு

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை புகைப்பட நிறுவன உரிமையாளர் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், தாக்குதல் நடத்திய அதே சி.ஐ.டி அதிகாரிகள் இருவர், "கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் கமரா பையை மீட்டோம்" எனக் கூறி அதனை ஒப்படைக்க காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இதன்போது, முறைப்பாட்டாளரால் அவர்கள் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து, சி.ஐ.டி அதிகாரிகள் இருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஏனைய இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த சி.ஐ.டி அதிகாரிகள் எனவும், ஏனைய இருவரும் அவர்களது நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

you may like this

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்