தமிழர் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான உணவகம் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
வவுனியாவில் (Vavuniya) உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (03) வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகமொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சைவ உணவகத்திற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.
பெட்டியின் மீது தாக்குதல்
இதன்போது அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 3 மணி நேரம் முன்
