இளைஞர் மீது நடந்த தாக்குதல்: வெடித்த போராட்டம்
அவிசாவளை (Avissawella) - எலிஸ்டன் தோட்ட இளைஞர் மீது தோட்ட கள உத்தியோகத்தர்கள் தாக்குதல் மேற்கொண்டதை கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அவிசாவளை எலிஸ்டன் தோட்ட இளைஞன் மீது தோட்ட கள உத்தியோகத்தர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து தாக்குதலுக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து கட்டம் கட்டமாக பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டு உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இளைஞர் மீது மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து அவிசாவளை எலிஸ்டன் தோட்ட மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும் தோட்ட கள உத்தியோகத்தர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாக்குதலுக்குள்ளான இளைஞரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
