எதிர்க்கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல்! ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் அராஜகம்
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் வந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“நல்லாட்சியின் போது மக்களுக்கு செய்தது என்ன” என கேள்வி எழுப்பிய மேற்படி அணியினர், ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் நேற்றுமுன்தினம் அரச தலைவர் இல்லத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் எதிரொலியாகவே இன்றைய தினம் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தமது அதரவாளர்களுடன் கட்சியின் அலுவலகத்திற்கு முன்னால் வந்து போராட்டம் நடத்தியதுடன் முட்டைகளை வீசியும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.