வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு

Batticaloa Sri Lanka Northern Province of Sri Lanka
By Pavan Nov 07, 2023 03:47 AM GMT
Report

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம், தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைப்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.

சிங்கள மக்களின் தலைவனாகவே ரணில் தன்னை காட்ட முயல்கிறார்: சபா குகதாஸ் குற்றச்சாட்டு

சிங்கள மக்களின் தலைவனாகவே ரணில் தன்னை காட்ட முயல்கிறார்: சபா குகதாஸ் குற்றச்சாட்டு

மாணவர்கள் மீதான தாக்குதல்

அந்த மேச்சல் நிலங்களில் வாழ்கின்ற வாயில்லாத ஜீவன்கள் துன்புறுத்தப்படுவதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கதையாக உள்ள நிலையில் அதற்காக நீதி கேட்டு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு | Attack On University Students

இவ்வாறான நிலையில் சிங்கள பேரினவாத அரசின் காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவரையுமாக ஆறு பேரை சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை பார்ப்பதற்காக சென்ற மதத்தலைவரான அருட்பணி ஜெகதாசுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு | Attack On University Students

நீதிவான் பிணையில் செல்ல மாணவர்களை அனுமதித்த போதும் குறுகிய நேரத்தில் கிராம சேவையாளர்களின் கடிதத்தை பெற வேண்டும் எனக் காரணம் கூறி விடுவிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் திட்டமிட்டவகையில் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

சிங்கள பேரினவாதம்

ஜனநாயக வழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தமை கண்டிக்கத்தக்க விடயம்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை சிங்கள பேரினவாதம் விரும்பாத நிலையில் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைக்கிறது.

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு | Attack On University Students

தமிழர் பகுதிகளில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து வரும் நிலையில் சர்வதேச அமைப்புக்கள் தலையீடு செய்ய வேண்டும்.

ஆகவே இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு எதிராக உள்ளக விசாரணை தேவையில்லை.

சர்வதேச விசாரணையே வேண்டுமென வலியுறுத்தி நிற்பதை இனியாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு | Attack On University Students

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்