இலங்கையர்களை கனடாவுக்கு கடத்த முயற்சி - எடுக்கப்பட்ட நடவடிக்கை
canada
court
srilankan
smuggle
By Sumithiran
தமிழ்நாட்டிலுள்ள இலங்கையர்களை கனடாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்த முயன்ற நால்வருக்கு பிணை வழங்கியதை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை (NIA), நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ரசூல், சதாம் உசேன், Andul Mohitu மற்றும் சோக்ரட்டீஸ் ஆகிய நால்வர் மீது, சட்ட விரோதமாக இலங்கையர்களை கனடாவுக்கு கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், சிறப்பு நீதிமன்றம் ஒன்று அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
அதை எதிர்த்து தேசிய புலனாய்வு முகமை சார்பில் வாதிட்ட சட்டத்தரணியான பிரசன்ன குமார் என்பவர்,
குற்றத்தின் தீவிரத்தன்மையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அவர்களுக்கு பிணை வழங்கியது தவறு என்றும், பிணை பெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் போலியானவை என்றும், அதுவே பெரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.
