ஆங் சான் சூகி உயிருடன் உள்ளாரா : மியான்மர் இராணுவ ஆட்சிக்கு மகன் விடுத்துள்ள சவால்
மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூகி உயிருடன் இருக்கிறார் என்பற்கு ஆதாரம் தருமாறு அவரது இளைய மகன் கிம் அரிஸ் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு சவால் விடுத்துள்ளார்.
தெற்காசிய நாடான மியான்மரில், 2021ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூச்சி, 80, தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசியக் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பின், ஊழல் மற்றும் நாட்டின் ரகசியங்களை வெளியிட்டது உட்பட பல குற்றச்சாட்டுகளில், சூச்சிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உயிருடன் இருக்கிறார் என்பற்கு ஆதாரம்
கடந்த மே மாதம் அவரை வீட்டுச் சிறைக்கு மாற்றியுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் வசித்து வரும் ஆங் சான் சூகியின் இளைய மகன் கிம் அரிஸ் இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது தாயின் விடுதலைக்காகவும், மியான்மரின் அரசியல் கைதிகளுக்காகவும் சர்வதேச அளவில் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது அவர் ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறார் என்பற்கு ஆதாரம் தருமாறு ராணுவ ஆட்சிக்குழுவிற்கு சவால் விடுத்துள்ளார்.
உடல்நிலை மோசமடைந்து வருகிறது
வீட்டு காவலில் மாற்றப்பட்டதாக ராணுவ ஆட்சிக்குழு கூறியது குறித்தும் கடுமையான சந்தேகத்தை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறார் என்பதற்கு நாட்டின் ராணுவம் தலைமையிலான அரசு உறுதியான ஆதாரங்களை வழங்க வேண்டும்.

அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்பது தான் எங்களுக்குக் கிடைக்கும் ஓரே செய்தி. மியானமர் சிறையில் சூழல் மிகவும் கொடூரமானது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு வந்த ஒரு கடிதமே அவருடனான தனது கடைசி நேரடித் தொடர்பு. நான் அரசியலில் இருக்க விரும்பவில்லை. ஆனால் எனது தாயின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு கிம் அரிஸ் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 15 மணி நேரம் முன்