இலங்கை செல்லும் தமது பிரஜைகளை எச்சரித்தது அவுஸ்திரேலிய அரசாங்கம்!
இலங்கைக்கான சுற்றுலா பயணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அவுஸ்திரேலியா அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து அவுஸ்திரேலியா அரசு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களம் வெளியிட்ட இலங்கைக்கான பயண ஆலோசனை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
"உங்கள் பாதுகாப்பு காரணமாக இலங்கை செல்வதற்கான உங்கள் பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் இப்போது உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
அரச எதிர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
போக்குவரத்து மற்றும் பொதுப்போக்குவரத்தில் இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். நீங்கள் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு மற்றும் நீண்ட மின் தடைகளை சந்திக்க நேரிடும்.
இலங்கையில் தற்பொழுது அவரச கால சட்டம் மற்றும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது எனவே இலங்கைக்கான உங்களது பயணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்", எனக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் நிலவும் பதற்றம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.