யாழில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) "பசியை போக்குவோம்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனியும் போசணைக் கண்காட்சியும் நடைபெற்றது.
வேள்ட் விஷன் லங்கா நிறுவனம் மற்றும் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன, சங்கானை பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து நேற்று (04) இந்த நிகழ்வை நடத்தியிருந்தன.
குறித்த விழிப்புணர்வு நடைபவனியானது சங்கானை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து சங்கானை கலாசார மண்டபத்தை சென்றடைந்தது.
போசணைக் கண்காட்சி
அங்கு விருந்தினர்களால் போசணைக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து போசணை பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டம் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு சங்கானை உதவி பிரதேச செயலர் பிரணவசொரூபி சிவகரன், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் DR . A.கேதீஸ்வரன், வலிகாம வலய பிரதிக் கல்விப் பணிபாளர் சஞ்சீவன், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி DR யதுநந்தனன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகநாதன் ஜெயந்தன், ENOUGH Campaign முகாமையாளர் செல்வி லாவண்யா சூரியகுமார், World Vision முகாமையாளர் யூட் நிசாந்தன், அரச உத்தியோகத்தர்கள், World Vision உத்தியோகத்தர்கள், சங்கானை பிரதேச சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இணைந்து கொண்டனர்.
கண்காட்சியை பார்வையிடுவதற்கு சிறப்பாக மேலதிக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் லாவண்யா சுகந்தன், சமுதாய வைத்திய நிபுணர் சிவகணேஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளில் அரச கொள்கை நியமங்களை உறுதியாக செயற்படுத்த வேண்டி மாணவர்களினால் கையொப்பமிட்ட விண்ணப்பக் கோரிக்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









